முன்னுரை
நாளும் பலமுறை, பல ஊடகங்களின் வழி பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நீதி அரசர்களால் விளக்கம் தரப்பட்டு, சமுதாயத்தை நெறிப்படுத்த, முறைப்படுத்த முயன்று வெற்றியும், தோல்வியும் மாறி மாறி காணும் ஒரு சொற்றொடர்: "மனித உரிமைகள்", "மனித உரிமை மீறல்", "மனித உரிமை காக்கும் அமைப்புக்கள்"! இன்றைய மனிதனை, மனிதனாக வாழ உதவும், வாழ விரும்பச் செய்யும், வாழ வழி வகுக்கும் கருத்துக்கள், வழிமுறைகள், சொற்றொடர்கள், சொல், செயல் முறை விளக்கங்கள்.. இப்படி பலப் பல!
'மனித உரிமை' என்பது இன்றையச் சூழலில் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. அந்தந்த நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் – இவற்றைப் பொறுத்து 'மனித உரிமைச் சட்டமும்', அதைப் பயன்படுத்தும் முறையும், விளக்கங்களும் மாறுபடுகின்றன என்பது நமது அனுபவம்! நேர் உணர்வு!
'மனித உரிமை' என்ற சொல்லுக்கு பாகிஸ்தானில் ஒரு விளக்கம், அமெரிக்காவில் ஒரு விளக்கம், சீனாவில் ஒரு விளக்கம், ஜப்பானில் ஒரு விளக்கம், பாரத நாட்டில் மற்றொரு விளக்கம்!
ஐக்கிய நாட்டு நிறுவனம் (United Nations Organization) உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய 'மனித உரிமை சாஸனத்தை' உருவாக்கி உள்ளது. ஒரு பிரகடனத்தையும் 1948-ம் ஆண்டே செய்துள்ளது "Declaration of Human Rights" என்ற பெயரில்! இருப்பினும் அவற்றை அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கண்கூடு.
"திருக்குறள்" உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகம்! – ஓர் சட்ட இலக்கியம்! மனித வாழ்விற்கு அப்பாற்பட்டதல்ல இலக்கியம். மனிதனின் சிந்தனைகள், செயற்பாடுகள், அவனது உணர்வுகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து எடுத்து உரைப்பதே ஓர் இலக்கியம்.
அவன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பதும் இலக்கியத்தின் நோக்கம். எத்தனையோ அறவழிகாட்டும் இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது "திருக்குறளே" என உறுதியாகக் கூறலாம்.
திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகளை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டு, செயல் வடிவம் கொடுத்து, காத்து வந்தால் இந்த வையகம் வானகமாக மாற உறுதியாக வாய்ப்புண்டு.
இனம், மொழி, மதம், நாடு என்ற எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்வியல் நெறிகளை அளிப்பது அல்லவா புனிதத் திருக்குறள்! முடியாட்சிக்குக் கூறப்பட்ட அறக்கருத்துக்கள் குடியாட்சிக்கும் பொருத்தமாயுள்ளது திருவள்ளுவத்தின் சிறப்பு. அவர் கூறிய அறங்களில் பல மனித உரிமைச் சிந்தனைகளாகப் பரிமளிக்கின்றன!
10-12–1948 அன்று ஐக்கிய நாட்டுச் சபை உலக மனித உரிமைப் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) உருவாக்கி, ஏற்றுக் கொண்டது. இந்த அனைத்து நாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின்படி மனித உரிமை எனப்படுவது 'ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகள்' ஆகும். (Human rights are the rights one has simply because one is a human being) எல்லா மனிதர்களுக்கும் அவ்வுரிமைகள் பொதுவானவை.
மனித உரிமைகள் என்பதை "Human Rights" என்பர்.
"Human rights are the basic rights and freedom entitled to any person, regardless of economic status, nationality, jurisdiction, age, ability, ethnicity, sex and sexuality. These basic rights are the rights to life, freedom, equality, justice and freedom of thought and expression".
அதாவது மனித உரிமை என்பது அடிப்படை உரிமையும், சுதந்திரமும் ஆகும். பொருளாதார நிலை, நாடு, எல்லைகள், வயது, திறமை, இனம், பால் ஆகியவற்றைக் கடந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதே மனித உரிமை. வாழ்வுரிமை(right to life), சுதந்திரம்(freedom), சமத்துவம்(equality), நீதி(justice), சிந்தனைச் சுதந்திரம்(freedom of thought), எழுத்து / பேச்சு சுதந்திரம்(freedom of expression) இவை அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
மனித உரிமைகள் இரு வகைப்படும்:
1 குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights).
(அ) வாழ்வுரிமை (Right to life)
(ஆ) நாட்டின் உரிமை (Right to nationality)
(இ) சட்டத்தின் முன் சமமான தன்மை (Equality before law)
(ஈ) சிந்தனை உரிமை (Freedom of thought)
(உ) எழுத்து / பேச்சு உரிமை (Freedom of expression)
(ஊ) பாதுகாப்பு உரிமை
2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural
rights)
(அ) உணவு உரிமை (Right to food)
(ஆ) உரையுள் உரிமை (Right to shelter)
(இ) வாழ்க்கைத் தகுதி (Standard of living right)
(ஈ) வேலைக்கு உரிமை (Right to work)
(உ) கல்வி உரிமை (Right to education)
(ஊ) கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பு (Right of
participation in cultural activities)
(எ) தனிச் சொத்து உரிமை (Right to personal property) போன்றன.
அரசோ பிறரோ அடுத்தவருடைய மனித உரிமைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும்.
சுருங்கக் கூறின், பால், இன வேறுபாடின்றி உலகின் அனைத்து ஆண், பெண்களுக்குள்ள உரிமைகள் மனித உரிமைகள் ஆகும். ஒருவரது பிறப்பு, நாடு, சாதி, சமயம், சொத்து, நிறம் ஆகிய எதனாலும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை மனித உரிமைகள் ஆகும்.
திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகளைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம்:
1 வாழ்வு உரிமை ( Right to life)
2 பொருளாதார உரிமை ( Economic right)
3 கல்வி உரிமை (Right to education)
4 பேச்சுரிமை ( Right to expression)
5 நீதி பெறும் உரிமை (Right to equality before law)
6 தன்னுரிமை ( Right against self injury)
1 வாழ்வுரிமை :
மனிதனின் வாழ்வுரிமை பற்றி திருக்குறள் பொருட்பாலில் பல குறிப்புகள் உள்ளன. வாழ்வுரிமை என்பது உயிர் வாழும் உரிமை மாத்திரம் எனக் கொள்ளுதல் சரியாகாது; தரமான வாழ்விற்கும் உரிமை எனக் கொள்ளவேண்டும்.
வாழ்க்கைத் தரம், சுகாதாரச் சுற்றுச்சூழல், தூய்மையான பணியிடம், தேவையான ஓய்வு – அனைத்தையும் உள்ளடக்கியதே வாழ்வுரிமை ஆகும்.
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவு கூறும்: "எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கின்றனர். அவர்களுக்கு அறிவும், மனசாட்சியும் உள்ளன. எனவே, ஒருவருக்கு ஒருவர் சகோதர உணர்வோடும், ஒருவரை ஒருவர் மதித்தும் வாழ வேண்டியது அவர்தம் கடமையாகும்"
இதைத்தான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (குறள் 972)
என்று உணர்ர்த்தியுள்ளார்!
பிறப்பினால் எவரும் வேறுபடுவதில்லை; "உழைப்பே உயர்வளிக்கும்" என அறிவுறுத்தி, சாமானியத் தொழிலாகக் கருதப்பட்ட வேளாண்மைத் தொழிலுக்குச் சிறப்பளித்து "உழவு" என்ற அதிகாரத்தையே படைத்தார்!
"சுழன்றும் ஏர்பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை" (குறள் 1031)
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" (குறள் 1032)
என உழவுத் தொழிலுக்கு முதன்மையிடம் கொடுத்ததுமல்லாமல்,
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்" (குறள் 1033)
என உழவர் பெருமக்களைச் சிறப்பித்து, பிறப்பினால் மனிதர்களை வேறுபடுத்துவது தவறு என்றும் உணர்த்துகிறார்.
"உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேறாது இயல்வது நாடு" (குறள் 734)
ஒவ்வொருவருக்கும் பசி, பிணி, பகையின்றி வாழும் உரிமை உள்ளதென்றும், அவற்றினின்று தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமையென்றும் திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு" (குறள் 385)
பொருள் வரும் வழிகளை உண்டாக்குதல், பெற்ற பொருட்களைச் சேர்த்தல், சேர்த்தவற்றைக் காத்தல், அவற்றைக் குடிமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல் ஆகியவற்றைச் சிறப்பாகத் திறன்படச் செய்பவனே நல்ல அரசன் என்கிறார்.
அத்தகு அரசனின் கீழ் வாழும் குடிமக்கள் அச்சமும், கவலையுமின்றி இனிது வாழ்வர்; அவர்தம் வாழ்க்கைத் தரம் நன்கு விளங்கும். இத்தகு வாழ்வுரிமை அவ்வரசின் கீழ் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என அறிவுறுத்துகிறார்.
பொருளாதார உரிமைகளில் மிகவும் இன்றியமையாதது "உணவு உரிமை".
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது அரசின் / சமுதாயத்தின் கடமை.
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று அறச்சாலைகள் அமைத்து அனைவருக்கும் அன்னமிடுதல் அல்லவா?
"உணவில்லை" என்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது; வறுமையற்ற சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு இந்நாட்டின் அரசியல் சுதந்திரம் இன்றியமையாதது என முழுமையாக உணர்ந்தவர் மகாகவி பாரதி. அவர் சினம் கொண்டு கூறுவார்:
"தனி ஒருவருக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" என்று!
வள்ளுவர் வாழ்ந்த சமுதாயத்தில் பொதுவுடைமை, ஜனநாயகம் போன்ற கருத்துக்கள் தழைத்தோங்காத காலம். தனியுடைமை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயம். அத்தகுச் சமுதாயத்தில் வளமையும் வறுமையும், ஏற்றமும் தாழ்வும் இருந்தது இயல்பே. வறுமையின் பிடியில் சிக்கி, பசியும் அதனால் ஏற்பட்ட இறத்தலும் இருந்துள்ளது. இச்சீர்கேட்டினை எண்ணி மனம் வெதும்பிய வள்ளுவர் தமது திருக்குறளில் நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களைப் படைத்துள்ளார்.
ஒரு சாரார் வளமுடன் வாழும் நிலையில், மற்றொரு சாரார் பிச்சை எடுத்து உண்ணும் நிலையும் உள்ளதல்லவா? அதற்குக் காரணமாக விதியை நொந்து கொள்ளுகிறோம்! இறைவனைச் சாடுகிறோம்!
திருவள்ளுவர் இந்நிலைக்கு இறைவனும், விதியும் காரணமென்றால், அவ்விறைவன் எதற்கு என்று நினைத்துச் சாபமிடுகிறார்!
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்" (குறள் 1062)
பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் உயிர்களைப் படைத்திருந்தால், அப்படிப் படைத்தவனே இந்த உலகிற்கு வந்து பிச்சையெடுப்பவரைப்போல தானும் அலைந்து திரிந்து கெட்டுப் போகட்டும் எனச் சபிக்கிறார்!
இக்குறள் நமக்கு உணர்த்தும் உண்மை சமுதாயத்தில் எல்லோரும், எல்லாமும் பெற்றுச் சமமாக வாழும் உரிமை உள்ளது என்பதே.
பொருளாதார ஏற்றத் தாழ்வு, அதனால் ஏற்படும் வறுமை, அதன் விளைவாய் இரத்தல் ஆகியவை கொடுமை. அவையற்ற சமுதாயமே மனிதனை உயர்த்த முடியும் என்ற கருத்தை உணர்கிறோம்.
பொருளாதார உரிமை:
பொருள் தேடும் உரிமை, அதனைப் பாதுகாக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு எனத் தெளிவாக்குகிறது திருக்குறள். அப்படிப் பொருள் தேடுவது அறவழியில் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது.
வினைத்தூய்மை என்ற அதிகாரத்தில் கூறுகிறார் திருவள்ளுவர் :
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற் பா லவை" (குறள் 656)
பிறர் வருந்தும்படி ஒருவன் அடைந்த பொருள் அனைத்தும், பெற்றவன் வருந்தி அழும்படி அவனை விட்டுப் போய்விடும். நல்ல வழியில் வந்த பொருள் தொலைந்தாலும் பின்னர் நன்மையே தரும். பொருளாதார உரிமை அனைவருக்கும் உண்டு – அதற்காக அடுத்தவர் உரிமையை மீறுவது தவறு; அற வழியல்ல; பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்ப்பது ஏற்புடையது இல்லை; கண்டனத்திற்குரியது.
"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை" (குறள் 656)
தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது.
அறமற்ற வழியில் அநியாயமாகப் பொருள் சேர்த்தல் தவறு என்று உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைதனை உணர்த்துவதால் லஞ்சமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்திற்கு வள்ளுவப் பெருந்தகை வழி காட்டுகிறார்!
கொடுமை தவறு :
உலக மனித உரிமைகள் பிரகடத்தின் 5-ம் பிரிவு கூறும்: "எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது. கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது" என்று. அரசு குடிமக்களை கண்ணோட்டமின்றி வருத்தக்கூடாது. அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீரே கொடுங்கோல் அரசைத் தேய்க்கும் படையாக அமையும். எனவே அரசன் நேர்மையான முறையில் தன் குடி மக்களைக் காத்து ஆட்சி செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீற் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை" (குறள் 555)
கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அழிந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.
உணர்வுகளைப் புண்படுத்துதல் மனித உரிமை மீறல் ஆகும் :
மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்.
"இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது". (குறள் 99)
பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
எழுத்து / பேச்சுரிமை
மனித உரிமைகளுள் முக்கியமான ஒரு உரிமை தன் கருத்துக்களை எழுத்து, பேச்சு மூலம் வெளிப்படுத்துவது. இது இல்லையெனில், மற்ற உரிமைகளும் பயனற்றுப் போகும். மனிதனுக்குச் சொல்லுரிமை இருக்கிறது என்று கூறும் திருவள்ளுவர், அத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வழி காட்டுகிறார்.
"சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இனிமை அறிந்து". (குறள் 645)
தான் சொல்லுகின்ற சொல்லை வெல்லக் கூடிய வேறு ஒரு சொல் எதுவும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்னரே சொல்ல நினைத்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
"சொலல் வல்லன் சோர்வு இலான் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது" (குறள் 647)
எதையும் சொல்லுவதில் வல்லவனாகவும், மறதியும், சோர்வும் இல்லாமல் சொல்லுபவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் உள்ள சொல்வன்மைமிக்கவனை யாராலும் வெற்றி கொள்ள முடியாது.
நீதி பெறும் உரிமை:
உலக மனித உரிமைப் பிரகடத்தின் 7, 8 பிரிவுகளின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்புரிமை படைத்தவர். எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அடிப்படை உரிமைகள் சட்டப்படி அளிக்கப்படவும், அவை மீறப்படும் பொழுது தகுதி வாய்ந்த நீதி அமைப்புகளின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் உண்டு.
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்". (குறள் 388)
நீதி நெறி முறைகள் தவறாமல் குடிமக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை மக்கள் ஒப்பற்ற தெய்வமென மதித்துப் போற்றுவர்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், நீதியைப் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நிலை நாட்டுவது அரசின் கடமை எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். மக்களும்கூட நடுவு நிலைமை தவறாது வாழ வேண்டும் என்று அறத்துப்பால் "நடுவு நிலைமை" அதிகாரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.
கல்வி உரிமை
கல்வியின் சிறப்பை அனைவரும் அறிவோம். எனவே அரசு கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தல் வேண்டும். அதை இந்திய நடுவண் அரசு சட்டமாக இயற்றியுள்ளது பற்றி இந்தியர் அனைவரும் பெருமைப்படலாம். அதை முழுமையாக ஏற்று வெற்றி அடையச் செய்ய வேண்டியது மக்கள் கடமை. அது ஒரு மனித உரிமையாகக் காக்கப்பட வேண்டும்.
கல்வி கற்றலின் இன்றியமையாமையை ஓர் அதிகாரம் முழுமையும் விளக்கியுள்ளார். கல்லாதலினால் ஏற்படும் கேட்டினையும் வள்ளுவப் பெருந்தகை தெளிவுபடுத்தியுள்ளார்.
கல்வி இன்னாருக்குத்தான் உரியது என்று வறையறுக்காது, அனைவருக்கும் பொது என்று விளக்குகிறார்.
"யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு". (குறள் 397)
கற்றவர்களுக்குத் தன் நாட்டையும் ஊரையும் போலவே பிற நாடுகளும் ஊர்களும் உரிமை உடையவனவாகும். அப்படி இருக்க ஒருவன் சாகும்வரை கற்காமல் காலத்தை வீணாக்குவது ஏன்?
என்று வியக்கிறார் வள்ளுவர்.
"கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை". (குறள் 414)
ஒருவன் கற்கவில்லையென்றாலும் கற்றவர்கள் சொல்வதைத் தவறாமல் கேட்டறிய வேண்டும். அது அவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போன்று துணையாய் அமையும். கேடில் விழுச்செல்வம் கல்வி அனைவருக்கும் உரியது; ஒருவன் அனைத்து முயற்சியும் செய்து கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற சீரிய சிந்தனையைக் காண்கிறோம்.
தன்னுரிமை
எவரும் தன்னுடல், ஆவி, ஆன்மா ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது "தன்னுரிமை" எனப்படும்.
அறிந்து பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும்.
அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?
"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்". (குறள் 293)
ஒருவன் தனது மனம் அறிந்து பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு பொய் சொன்னால் அவன் மனமே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
"துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்". (குறள் 926)
உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.
"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்". (குறள் 146)
பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு இவ்வுண்மையை நிலை நாட்டுகிறார் திருவள்ளுவர்.
உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. திரு மு.வரதராசன் சொல்லுவார்: "கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை" என்று.
பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்று சுட்டி, திருவள்ளுவர் கூறுவார்:
"குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்". (குறள் 1023)
முடிவுரை
திருவள்ளுவர் வாழ்ந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பல்லவா? அந்நாட்கள் மனித உரிமைகள் பற்றி நினைக்காத காலம். முக்காலும் உணர்ந்த முனிவர் அல்லவா வள்ளுவப் பெருந்தகை? ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும். அது மிகப் பெரிய உருவெடுக்கும் என்றுணர்ந்து, தீர்க்க தரிசனத்தோடு ஆக்கிய குறள்களைக் கண்டோம். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளில் முக்கியமான மனித உரிமைகளை ஆராய்ந்தோம்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் உணர்த்தும் உரிமைகளை உலக முழுமையும் ஏற்றுச் செயல்பட்டால், இவ்வையகம் வானகம் ஆவது உறுதி!
நாளும் பலமுறை, பல ஊடகங்களின் வழி பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நீதி அரசர்களால் விளக்கம் தரப்பட்டு, சமுதாயத்தை நெறிப்படுத்த, முறைப்படுத்த முயன்று வெற்றியும், தோல்வியும் மாறி மாறி காணும் ஒரு சொற்றொடர்: "மனித உரிமைகள்", "மனித உரிமை மீறல்", "மனித உரிமை காக்கும் அமைப்புக்கள்"! இன்றைய மனிதனை, மனிதனாக வாழ உதவும், வாழ விரும்பச் செய்யும், வாழ வழி வகுக்கும் கருத்துக்கள், வழிமுறைகள், சொற்றொடர்கள், சொல், செயல் முறை விளக்கங்கள்.. இப்படி பலப் பல!
'மனித உரிமை' என்பது இன்றையச் சூழலில் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. அந்தந்த நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் – இவற்றைப் பொறுத்து 'மனித உரிமைச் சட்டமும்', அதைப் பயன்படுத்தும் முறையும், விளக்கங்களும் மாறுபடுகின்றன என்பது நமது அனுபவம்! நேர் உணர்வு!
'மனித உரிமை' என்ற சொல்லுக்கு பாகிஸ்தானில் ஒரு விளக்கம், அமெரிக்காவில் ஒரு விளக்கம், சீனாவில் ஒரு விளக்கம், ஜப்பானில் ஒரு விளக்கம், பாரத நாட்டில் மற்றொரு விளக்கம்!
ஐக்கிய நாட்டு நிறுவனம் (United Nations Organization) உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய 'மனித உரிமை சாஸனத்தை' உருவாக்கி உள்ளது. ஒரு பிரகடனத்தையும் 1948-ம் ஆண்டே செய்துள்ளது "Declaration of Human Rights" என்ற பெயரில்! இருப்பினும் அவற்றை அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கண்கூடு.
"திருக்குறள்" உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகம்! – ஓர் சட்ட இலக்கியம்! மனித வாழ்விற்கு அப்பாற்பட்டதல்ல இலக்கியம். மனிதனின் சிந்தனைகள், செயற்பாடுகள், அவனது உணர்வுகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து எடுத்து உரைப்பதே ஓர் இலக்கியம்.
அவன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பதும் இலக்கியத்தின் நோக்கம். எத்தனையோ அறவழிகாட்டும் இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது "திருக்குறளே" என உறுதியாகக் கூறலாம்.
திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகளை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டு, செயல் வடிவம் கொடுத்து, காத்து வந்தால் இந்த வையகம் வானகமாக மாற உறுதியாக வாய்ப்புண்டு.
இனம், மொழி, மதம், நாடு என்ற எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்வியல் நெறிகளை அளிப்பது அல்லவா புனிதத் திருக்குறள்! முடியாட்சிக்குக் கூறப்பட்ட அறக்கருத்துக்கள் குடியாட்சிக்கும் பொருத்தமாயுள்ளது திருவள்ளுவத்தின் சிறப்பு. அவர் கூறிய அறங்களில் பல மனித உரிமைச் சிந்தனைகளாகப் பரிமளிக்கின்றன!
10-12–1948 அன்று ஐக்கிய நாட்டுச் சபை உலக மனித உரிமைப் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) உருவாக்கி, ஏற்றுக் கொண்டது. இந்த அனைத்து நாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின்படி மனித உரிமை எனப்படுவது 'ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகள்' ஆகும். (Human rights are the rights one has simply because one is a human being) எல்லா மனிதர்களுக்கும் அவ்வுரிமைகள் பொதுவானவை.
மனித உரிமைகள் என்பதை "Human Rights" என்பர்.
"Human rights are the basic rights and freedom entitled to any person, regardless of economic status, nationality, jurisdiction, age, ability, ethnicity, sex and sexuality. These basic rights are the rights to life, freedom, equality, justice and freedom of thought and expression".
அதாவது மனித உரிமை என்பது அடிப்படை உரிமையும், சுதந்திரமும் ஆகும். பொருளாதார நிலை, நாடு, எல்லைகள், வயது, திறமை, இனம், பால் ஆகியவற்றைக் கடந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதே மனித உரிமை. வாழ்வுரிமை(right to life), சுதந்திரம்(freedom), சமத்துவம்(equality), நீதி(justice), சிந்தனைச் சுதந்திரம்(freedom of thought), எழுத்து / பேச்சு சுதந்திரம்(freedom of expression) இவை அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
மனித உரிமைகள் இரு வகைப்படும்:
1 குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights).
(அ) வாழ்வுரிமை (Right to life)
(ஆ) நாட்டின் உரிமை (Right to nationality)
(இ) சட்டத்தின் முன் சமமான தன்மை (Equality before law)
(ஈ) சிந்தனை உரிமை (Freedom of thought)
(உ) எழுத்து / பேச்சு உரிமை (Freedom of expression)
(ஊ) பாதுகாப்பு உரிமை
2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural
rights)
(அ) உணவு உரிமை (Right to food)
(ஆ) உரையுள் உரிமை (Right to shelter)
(இ) வாழ்க்கைத் தகுதி (Standard of living right)
(ஈ) வேலைக்கு உரிமை (Right to work)
(உ) கல்வி உரிமை (Right to education)
(ஊ) கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பு (Right of
participation in cultural activities)
(எ) தனிச் சொத்து உரிமை (Right to personal property) போன்றன.
அரசோ பிறரோ அடுத்தவருடைய மனித உரிமைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும்.
சுருங்கக் கூறின், பால், இன வேறுபாடின்றி உலகின் அனைத்து ஆண், பெண்களுக்குள்ள உரிமைகள் மனித உரிமைகள் ஆகும். ஒருவரது பிறப்பு, நாடு, சாதி, சமயம், சொத்து, நிறம் ஆகிய எதனாலும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை மனித உரிமைகள் ஆகும்.
திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகளைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம்:
1 வாழ்வு உரிமை ( Right to life)
2 பொருளாதார உரிமை ( Economic right)
3 கல்வி உரிமை (Right to education)
4 பேச்சுரிமை ( Right to expression)
5 நீதி பெறும் உரிமை (Right to equality before law)
6 தன்னுரிமை ( Right against self injury)
1 வாழ்வுரிமை :
மனிதனின் வாழ்வுரிமை பற்றி திருக்குறள் பொருட்பாலில் பல குறிப்புகள் உள்ளன. வாழ்வுரிமை என்பது உயிர் வாழும் உரிமை மாத்திரம் எனக் கொள்ளுதல் சரியாகாது; தரமான வாழ்விற்கும் உரிமை எனக் கொள்ளவேண்டும்.
வாழ்க்கைத் தரம், சுகாதாரச் சுற்றுச்சூழல், தூய்மையான பணியிடம், தேவையான ஓய்வு – அனைத்தையும் உள்ளடக்கியதே வாழ்வுரிமை ஆகும்.
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவு கூறும்: "எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கின்றனர். அவர்களுக்கு அறிவும், மனசாட்சியும் உள்ளன. எனவே, ஒருவருக்கு ஒருவர் சகோதர உணர்வோடும், ஒருவரை ஒருவர் மதித்தும் வாழ வேண்டியது அவர்தம் கடமையாகும்"
இதைத்தான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (குறள் 972)
என்று உணர்ர்த்தியுள்ளார்!
பிறப்பினால் எவரும் வேறுபடுவதில்லை; "உழைப்பே உயர்வளிக்கும்" என அறிவுறுத்தி, சாமானியத் தொழிலாகக் கருதப்பட்ட வேளாண்மைத் தொழிலுக்குச் சிறப்பளித்து "உழவு" என்ற அதிகாரத்தையே படைத்தார்!
"சுழன்றும் ஏர்பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை" (குறள் 1031)
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" (குறள் 1032)
என உழவுத் தொழிலுக்கு முதன்மையிடம் கொடுத்ததுமல்லாமல்,
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்" (குறள் 1033)
என உழவர் பெருமக்களைச் சிறப்பித்து, பிறப்பினால் மனிதர்களை வேறுபடுத்துவது தவறு என்றும் உணர்த்துகிறார்.
"உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேறாது இயல்வது நாடு" (குறள் 734)
ஒவ்வொருவருக்கும் பசி, பிணி, பகையின்றி வாழும் உரிமை உள்ளதென்றும், அவற்றினின்று தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமையென்றும் திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு" (குறள் 385)
பொருள் வரும் வழிகளை உண்டாக்குதல், பெற்ற பொருட்களைச் சேர்த்தல், சேர்த்தவற்றைக் காத்தல், அவற்றைக் குடிமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல் ஆகியவற்றைச் சிறப்பாகத் திறன்படச் செய்பவனே நல்ல அரசன் என்கிறார்.
அத்தகு அரசனின் கீழ் வாழும் குடிமக்கள் அச்சமும், கவலையுமின்றி இனிது வாழ்வர்; அவர்தம் வாழ்க்கைத் தரம் நன்கு விளங்கும். இத்தகு வாழ்வுரிமை அவ்வரசின் கீழ் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என அறிவுறுத்துகிறார்.
பொருளாதார உரிமைகளில் மிகவும் இன்றியமையாதது "உணவு உரிமை".
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது அரசின் / சமுதாயத்தின் கடமை.
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று அறச்சாலைகள் அமைத்து அனைவருக்கும் அன்னமிடுதல் அல்லவா?
"உணவில்லை" என்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது; வறுமையற்ற சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு இந்நாட்டின் அரசியல் சுதந்திரம் இன்றியமையாதது என முழுமையாக உணர்ந்தவர் மகாகவி பாரதி. அவர் சினம் கொண்டு கூறுவார்:
"தனி ஒருவருக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" என்று!
வள்ளுவர் வாழ்ந்த சமுதாயத்தில் பொதுவுடைமை, ஜனநாயகம் போன்ற கருத்துக்கள் தழைத்தோங்காத காலம். தனியுடைமை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயம். அத்தகுச் சமுதாயத்தில் வளமையும் வறுமையும், ஏற்றமும் தாழ்வும் இருந்தது இயல்பே. வறுமையின் பிடியில் சிக்கி, பசியும் அதனால் ஏற்பட்ட இறத்தலும் இருந்துள்ளது. இச்சீர்கேட்டினை எண்ணி மனம் வெதும்பிய வள்ளுவர் தமது திருக்குறளில் நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களைப் படைத்துள்ளார்.
ஒரு சாரார் வளமுடன் வாழும் நிலையில், மற்றொரு சாரார் பிச்சை எடுத்து உண்ணும் நிலையும் உள்ளதல்லவா? அதற்குக் காரணமாக விதியை நொந்து கொள்ளுகிறோம்! இறைவனைச் சாடுகிறோம்!
திருவள்ளுவர் இந்நிலைக்கு இறைவனும், விதியும் காரணமென்றால், அவ்விறைவன் எதற்கு என்று நினைத்துச் சாபமிடுகிறார்!
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்" (குறள் 1062)
பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் உயிர்களைப் படைத்திருந்தால், அப்படிப் படைத்தவனே இந்த உலகிற்கு வந்து பிச்சையெடுப்பவரைப்போல தானும் அலைந்து திரிந்து கெட்டுப் போகட்டும் எனச் சபிக்கிறார்!
இக்குறள் நமக்கு உணர்த்தும் உண்மை சமுதாயத்தில் எல்லோரும், எல்லாமும் பெற்றுச் சமமாக வாழும் உரிமை உள்ளது என்பதே.
பொருளாதார ஏற்றத் தாழ்வு, அதனால் ஏற்படும் வறுமை, அதன் விளைவாய் இரத்தல் ஆகியவை கொடுமை. அவையற்ற சமுதாயமே மனிதனை உயர்த்த முடியும் என்ற கருத்தை உணர்கிறோம்.
பொருளாதார உரிமை:
பொருள் தேடும் உரிமை, அதனைப் பாதுகாக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு எனத் தெளிவாக்குகிறது திருக்குறள். அப்படிப் பொருள் தேடுவது அறவழியில் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது.
வினைத்தூய்மை என்ற அதிகாரத்தில் கூறுகிறார் திருவள்ளுவர் :
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற் பா லவை" (குறள் 656)
பிறர் வருந்தும்படி ஒருவன் அடைந்த பொருள் அனைத்தும், பெற்றவன் வருந்தி அழும்படி அவனை விட்டுப் போய்விடும். நல்ல வழியில் வந்த பொருள் தொலைந்தாலும் பின்னர் நன்மையே தரும். பொருளாதார உரிமை அனைவருக்கும் உண்டு – அதற்காக அடுத்தவர் உரிமையை மீறுவது தவறு; அற வழியல்ல; பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்ப்பது ஏற்புடையது இல்லை; கண்டனத்திற்குரியது.
"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை" (குறள் 656)
தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது.
அறமற்ற வழியில் அநியாயமாகப் பொருள் சேர்த்தல் தவறு என்று உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைதனை உணர்த்துவதால் லஞ்சமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்திற்கு வள்ளுவப் பெருந்தகை வழி காட்டுகிறார்!
கொடுமை தவறு :
உலக மனித உரிமைகள் பிரகடத்தின் 5-ம் பிரிவு கூறும்: "எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது. கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது" என்று. அரசு குடிமக்களை கண்ணோட்டமின்றி வருத்தக்கூடாது. அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீரே கொடுங்கோல் அரசைத் தேய்க்கும் படையாக அமையும். எனவே அரசன் நேர்மையான முறையில் தன் குடி மக்களைக் காத்து ஆட்சி செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீற் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை" (குறள் 555)
கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அழிந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.
உணர்வுகளைப் புண்படுத்துதல் மனித உரிமை மீறல் ஆகும் :
மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்.
"இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது". (குறள் 99)
பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
எழுத்து / பேச்சுரிமை
மனித உரிமைகளுள் முக்கியமான ஒரு உரிமை தன் கருத்துக்களை எழுத்து, பேச்சு மூலம் வெளிப்படுத்துவது. இது இல்லையெனில், மற்ற உரிமைகளும் பயனற்றுப் போகும். மனிதனுக்குச் சொல்லுரிமை இருக்கிறது என்று கூறும் திருவள்ளுவர், அத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வழி காட்டுகிறார்.
"சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இனிமை அறிந்து". (குறள் 645)
தான் சொல்லுகின்ற சொல்லை வெல்லக் கூடிய வேறு ஒரு சொல் எதுவும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்னரே சொல்ல நினைத்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
"சொலல் வல்லன் சோர்வு இலான் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது" (குறள் 647)
எதையும் சொல்லுவதில் வல்லவனாகவும், மறதியும், சோர்வும் இல்லாமல் சொல்லுபவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் உள்ள சொல்வன்மைமிக்கவனை யாராலும் வெற்றி கொள்ள முடியாது.
நீதி பெறும் உரிமை:
உலக மனித உரிமைப் பிரகடத்தின் 7, 8 பிரிவுகளின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்புரிமை படைத்தவர். எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அடிப்படை உரிமைகள் சட்டப்படி அளிக்கப்படவும், அவை மீறப்படும் பொழுது தகுதி வாய்ந்த நீதி அமைப்புகளின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் உண்டு.
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்". (குறள் 388)
நீதி நெறி முறைகள் தவறாமல் குடிமக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை மக்கள் ஒப்பற்ற தெய்வமென மதித்துப் போற்றுவர்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், நீதியைப் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நிலை நாட்டுவது அரசின் கடமை எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். மக்களும்கூட நடுவு நிலைமை தவறாது வாழ வேண்டும் என்று அறத்துப்பால் "நடுவு நிலைமை" அதிகாரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.
கல்வி உரிமை
கல்வியின் சிறப்பை அனைவரும் அறிவோம். எனவே அரசு கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தல் வேண்டும். அதை இந்திய நடுவண் அரசு சட்டமாக இயற்றியுள்ளது பற்றி இந்தியர் அனைவரும் பெருமைப்படலாம். அதை முழுமையாக ஏற்று வெற்றி அடையச் செய்ய வேண்டியது மக்கள் கடமை. அது ஒரு மனித உரிமையாகக் காக்கப்பட வேண்டும்.
கல்வி கற்றலின் இன்றியமையாமையை ஓர் அதிகாரம் முழுமையும் விளக்கியுள்ளார். கல்லாதலினால் ஏற்படும் கேட்டினையும் வள்ளுவப் பெருந்தகை தெளிவுபடுத்தியுள்ளார்.
கல்வி இன்னாருக்குத்தான் உரியது என்று வறையறுக்காது, அனைவருக்கும் பொது என்று விளக்குகிறார்.
"யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு". (குறள் 397)
கற்றவர்களுக்குத் தன் நாட்டையும் ஊரையும் போலவே பிற நாடுகளும் ஊர்களும் உரிமை உடையவனவாகும். அப்படி இருக்க ஒருவன் சாகும்வரை கற்காமல் காலத்தை வீணாக்குவது ஏன்?
என்று வியக்கிறார் வள்ளுவர்.
"கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை". (குறள் 414)
ஒருவன் கற்கவில்லையென்றாலும் கற்றவர்கள் சொல்வதைத் தவறாமல் கேட்டறிய வேண்டும். அது அவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போன்று துணையாய் அமையும். கேடில் விழுச்செல்வம் கல்வி அனைவருக்கும் உரியது; ஒருவன் அனைத்து முயற்சியும் செய்து கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற சீரிய சிந்தனையைக் காண்கிறோம்.
தன்னுரிமை
எவரும் தன்னுடல், ஆவி, ஆன்மா ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது "தன்னுரிமை" எனப்படும்.
அறிந்து பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும்.
அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?
"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்". (குறள் 293)
ஒருவன் தனது மனம் அறிந்து பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு பொய் சொன்னால் அவன் மனமே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
"துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்". (குறள் 926)
உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.
"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்". (குறள் 146)
பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு இவ்வுண்மையை நிலை நாட்டுகிறார் திருவள்ளுவர்.
உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. திரு மு.வரதராசன் சொல்லுவார்: "கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை" என்று.
பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்று சுட்டி, திருவள்ளுவர் கூறுவார்:
"குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்". (குறள் 1023)
முடிவுரை
திருவள்ளுவர் வாழ்ந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பல்லவா? அந்நாட்கள் மனித உரிமைகள் பற்றி நினைக்காத காலம். முக்காலும் உணர்ந்த முனிவர் அல்லவா வள்ளுவப் பெருந்தகை? ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும். அது மிகப் பெரிய உருவெடுக்கும் என்றுணர்ந்து, தீர்க்க தரிசனத்தோடு ஆக்கிய குறள்களைக் கண்டோம். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளில் முக்கியமான மனித உரிமைகளை ஆராய்ந்தோம்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் உணர்த்தும் உரிமைகளை உலக முழுமையும் ஏற்றுச் செயல்பட்டால், இவ்வையகம் வானகம் ஆவது உறுதி!
![]() |
வள்ளுவப் பெருந்தகை |